44 வயதில் திருமணம் செய்யப்போகும் பிரேம்ஜி!! வருங்கால மனைவி இந்த வேலை செய்கிறாரா!! லீக்கான ரகசியம்...

Gangai Amaren Premji Amaren Venkat Prabhu Gossip Today Greatest of All Time
By Edward Jun 08, 2024 07:30 AM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கிறது என்று தகவல் வெளிவந்தது. அந்த செய்தியை வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றின் மூலம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!.

44 வயதில் திருமணம் செய்யப்போகும் பிரேம்ஜி!! வருங்கால மனைவி இந்த வேலை செய்கிறாரா!! லீக்கான ரகசியம்... | News About Actor Premjis Marriage Wife Work Secret

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!. இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். மணமகள் மீடியாவில் இல்லை என்றும் கூறியிருந்தார்.

44 வயதில் திருமணம் செய்யப்போகும் பிரேம்ஜி!! வருங்கால மனைவி இந்த வேலை செய்கிறாரா!! லீக்கான ரகசியம்... | News About Actor Premjis Marriage Wife Work Secret

இந்நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்யப்போகும் பெண் குறித்த தகவல் ஒன்று லீக்காகியுள்ளது. பிரேம்ஜி குடும்பத்தினருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்ததில், பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளவுள்ள இந்துவின் குடும்பம் சேலத்தை பூர்வீகமாக கொண்டதாகவும் இந்து வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

இந்த திருமணம் காதல் திருமணம் தான் என்றும் இருவரும் எங்கே எப்படி அறிமுகமாகினார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் பிரேம்ஜியிடம் முதலில் பிரபோஸ் செய்தது இந்து தான் என்றும் கொஞ்ச நாள் காதலித்தவர்கள், பின் வீட்டில் விஷயத்தை சொல்லி இருவீட்டாரும் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று விசாரித்தவர்களில் சிலர் இப்படி கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.