சூப்பர்ஸ்டார் தம்பி மகளுக்கு இரண்டாம் திருமண ஆசை.. விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நடிகை
நிஹாரிகா
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கூறப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாகபாபுவின் மகளும் பிரபல நடிகையுமானவர் நிஹாரிகா. இவர் தெலுங்கு மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை நிஹாரிகாவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டது.
மனம் திறந்த நடிகை
இந்நிலையில், நடிகை நிஹாரிகா முதல் முறையாக தனது விவாகரத்து மற்றும் இரண்டாம் திருமணம் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் "எனது திருமணம் பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்தது ஆகும். வாழ்நாள் முழுவதும் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைந்து தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், நாம் நினைத்தது எல்லாம் எதுவும் வாழ்க்கையில் நடப்பது இல்லை. அப்படி தான் என் வாழ்க்கையிலும் நடந்தது. விவாகரத்து பெற்றதும் என்னை பலரும் பலவிதமாக பேசினார்கள்".
"ஆனால் என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொண்டேன். இனிமேல் யாரையும் நான் நம்ப கூடாது என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன். எனக்கு தற்போது 30 வயது ஆகிறது. அதனால் ஒரு நல்லவர் கிடைத்தால் கண்டிப்பாக மறுமணம் செய்ய யோசிக்க தயாராக இருக்கிறேன்" என கூறினாராம் நிஹாரிகா.
விவாகரத்து மற்றும் தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து நடிகை நிஹாரிகா பேசிய இந்த விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.