விவாகரத்துக்கு பின் எனக்கு எதிராக பல சதி!! உண்மையை உடைத்த நடிகை அமலா பால்..
மைனா படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அமலா பால். முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
விவாகரத்து பிறகு தன் வாழ்க்கையின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜாலியாக இருந்து மது, புகை என பார்ட்டிகளிலும் கலந்து கொண்டு மார்க்கெட்டை இழந்து வந்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்த வந்த அமலா பால் தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அமலா பால், கொரானாவுக்கு பிறகு நான் இந்தவிழாலில் கலந்து கொள்கிறேன். 4 ஆண்டுகளாக கடினமாக உழைத்து இருக்கிறோம். பல இடையூறுகளுக்கு பின் இந்த படத்தை முடித்துள்ளோம்.
பல தடைகள் இந்த படத்திற்காக வந்தது. வெளியிட கூடாது என்று சிலர் கடுமையாக உழைத்தனர். கடவுள் அருளால் தான் இந்த படம் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
பல கிரைம் படம் வந்திருந்தாலும் தடவியல் துறை பற்றிய படங்கள் அதிகமாக வரவில்லை. இதற்கு மக்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அமலா பால்.