எனக்கு வாய்ப்பு வேண்டும், அதுக்கு தான் என் தோலை அப்படி வச்சிருக்கேன்!! வெளிப்படையாக நடிகை..
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஜொலித்து வருபவர்களில் ஒருவர் நடிகை நோரா ஃபதேஹி. நடிகையாக மட்டுமில்லாமல், டான்சர், தயாரிப்பாளர், பாடகர், நடுவர் என பன்முகத்திறமை கொண்டு பாலிவுட்டில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பிற நடிகர்கல் போல் மன அழுத்ததில் சிக்கிக்கொள்ளாமல் தன்னை எப்படி காப்பாற்ற முடியும் என்பது பற்றி பேசியிருக்கிறார்.
மக்களுக்கு என்னை ஒவ்வொரு முறையும் நிரூபிப்பது தான் என்னுடைய வேலை. நான் எல்லாவற்றையும் செய்யும் ஆளாக நான் இருக்கிறேன். என்னால் அதையும் செய்யமுடியும், இதையும் செய்யமுடியும், எனக்கு வாய்ப்ப் மட்டுமே வேண்டும் அவ்வளவு தான். அது தான் என்னுடைய பிரச்சனை. அதை தான் என் தலையில் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உங்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டும்.
எந்த கலைஞர்களும் இங்கு முழுக்க முழுக்க சரியானவர்கள் அல்ல. நான் என்னை ஒரு கலைஞராக மட்டுமே பார்க்கிறேன். அதனால் தான் நான் பலவற்றை செய்து வருகிறேன் என்றும் நான் ஆடுகிறேன், பாடுகிறேன், தயாரிக்கிறேன், நடுவராகவும் இருக்கிறேன். அதனால் தான் என்னை மன அழுத்தத்தில் தள்ளுவதில்லை. அது சரியாக அமையாமல் போனால் அது என்னை பாதிப்பதில்லை.
இதனால் தான் என் நண்பர்கள் ஏதேனும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு சிக்கித்தவிக்கிறார்கள். சரியாக படம் ஓடாமல் வசூல் பெறாமல் போனால் அதனால் 6 அல்லது 8 மாதங்கள் உடைந்து போய்விடுக்கிறார்கள். இதனால் தான் உங்களை நீங்களே நேர்மறையாக உணர வேண்டும்.
நான் என் தோலை அடர்த்தியாக வைக்க காரணம் இந்த சோசியல் மீடியா உங்களை கொன்று விடும், சினிமாத்துறை மீது அளவுக்கடந்த காதல் இருக்கிறது. அதனால் தான் நான் இங்கு வந்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.