ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டம்!! மறுப்பக்கத்தை கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகா...
சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகள் சமீபகாலமாக வெளிப்படையாக அனைத்து விஷயங்களை பேசி வருவது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் சீசனில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்து வந்த விஜே தீபிகா கோவிலுக்கு செல்வது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் நடித்து அதன்பின் சீரியலைவிட்டு விலகினார் தீபிகா.
சமீபத்தில் அளித்த பேட்டியில், பீரியட்ஸ் சமயத்தில் கூட நான் கோவிலுக்கு செல்வேன், சாமி கும்பிடுவேன், பூஜை அறைக்கும் செல்வேன், விபூதி குங்குமம் வைத்துக்கொண்டு தான் செல்வேன். என்னை பொறுத்தவரையில் என் கடவுள் எனக்கு உடம்பு சரியில்லை என்று என்னை ஏற்றுக்கொள்வார். என்னை எப்போதும் அவர் ஒதுக்கமாட்டார் என்று கூறியிருந்தார்.
மேலும் பேசிய விஜே தீபிகா, கல்லூரி படுக்கும் போது எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது காலையில் எப்படியாவது 3 இட்லி வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை, ஆனால் முடியவில்லை. அந்த அளவிற்கு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். விடுதியில் கூட மார்னிங் ஷிப் என்பதால் காலையில் ஹாஸ்டலில் சாப்பிடமுடியாது.
இதையெல்லாம் வெளியில் சொல்லாமல் தோழிகளுடன் சிரித்து பழகினேன். ஆடிஷனுக்கு செல்லும் போது என் தோழிகளில் ஆடையை வாங்கி அணிந்து செல்வேன். அதன்பின் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தன் வாழ்க்கையை மாற்றியதாக விஜே தீபிகா பகிர்ந்துள்ளார்.