திருமணமான வாழ்க்கை செட் ஆகவில்லை.. விவாகரத்து குறித்து பேசிய பார்த்திபன்!!
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை நடித்து இயக்கி வருபவர் தான் பார்த்திபன். இவர் நடிகை சீதாவை 1990 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய பார்த்திபன், சினிமா பிரபலங்கள் மத்தியில் 2 மாசத்துக்கு ஒரு விவாகரத்து செய்தி வருகிறது. இதை எல்லாம் மக்கள் சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். நான் ஆரம்பத்தில் விவாகரத்து செய்வது தப்பான விஷயம் என்று நினைத்தேன்.
ஒரு கட்டத்தில் மனசுக்கு பிடிக்காமல், அவர்களை கஷ்டப்படுத்துவதை விட அவர்களை பிரிந்து சந்தோஷமாக வைத்து நாமும் சந்தோஷமாக இருக்கலாமே என்று புரிந்துகொண்டேன். திருமணமான சில மாதங்களிலேயே எனக்கு இந்த திருமணம் செட் ஆகவில்லை என்பதை உணர்ந்தேன். விவாகரத்து செய்துகொள்ள 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது முட்டாள்த்தனம் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.