சீதாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன்.. ஆனால்!! விவாகரத்து பற்றி விளக்கிய பார்த்திபன்..

Parthiban Seetha Gossip Today Divorce Tamil Actress
By Edward Jul 09, 2024 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், நடிகராகவும் பல படங்களில் நடித்தும் பிரபலமானர். இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். 1990ல் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்த பார்த்திபன், மூன்று குழந்தைகளை பெற்றார். 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சீதாவும் - பார்த்திபனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சீதாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன்.. ஆனால்!! விவாகரத்து பற்றி விளக்கிய பார்த்திபன்.. | Parthipan Reveals First Time About Divorce Seetha

பிரிந்தாலும் இருவரும் பிள்ளைகளில் எதிர்காலத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீதாவை விவாகரத்து செய்ய காரணம் என்ற உண்மையை கூறியிருக்கிறார். அதில், நான் காதலை முதன்முதலில் உணர்ந்தது சீதாவிடம் தான். இந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், ”நான் இப்போது எந்த காரணத்தையும் கூறி எந்த உண்மையையும் மறைக்க அவசியம் இல்லை, காதலையும் கடந்து விட்டோம், பொய்யையும் கடந்துவிட்டோம்.

பக்கத்தில் உட்கார்ந்த முன்னாள் காதலர்.. நடிகை நயன்தாரா எடுத்த அந்த முடிவு.. பற்றவைத்த பிரபலம்

பக்கத்தில் உட்கார்ந்த முன்னாள் காதலர்.. நடிகை நயன்தாரா எடுத்த அந்த முடிவு.. பற்றவைத்த பிரபலம்

இப்போது விவாகரத்து என்று எல்லோரும் சொல்லும் போது, அது வேண்டாம் என்று நானே புரியாமல் அதை (விவாகரத்து) விரட்டிட்டு இருந்தேன். விவாகரத்து எல்லாம் வேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று என் மனைவியிடம் கேட்டுட்டு இருந்தேன். இப்போது அப்பயெல்லாம் இருக்கக்கூடாது. முதலில் சீதாவை எப்படி புடிக்கும் என்றால், அவர்களை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது, பெரிய ஸ்டாராக ஆக்க வேண்டும் என்பதுதான்.

பின் அவர்களுக்கு நடிக்க பிடிக்கவில்லை, அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதன்பின் அவங்க நடிக்க விருப்பப்படும் போது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது, ஏனென்றால் இந்த குடும்பம் பிரிந்துவிடுமோ என்று தான். அப்போது நான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். இப்போது இருந்திருந்தால் ’யம்மா தாயே நீ ஷூட்டிங் போய்ட்டுவான்னு’ சொல்லியிருப்பேன்.

சீதாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன்.. ஆனால்!! விவாகரத்து பற்றி விளக்கிய பார்த்திபன்.. | Parthipan Reveals First Time About Divorce Seetha

என் மனைவி என்மீது வைத்த காதல் உயிருக்கு மேலான காதல் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார். விவாகரத்து பற்றி பார்த்திபன் பல ஆண்டுகள் கழித்து உணர்ச்சிபூர்வமாக சொன்னது தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.