பருத்தி வீரன் படத்தின் கிளைமேக்ஸ் இத்தனை முறை மாற்றப்பட்டதா? ரகசியத்தை உடைத்த இயக்குநர்..

climax ameer karthik paruthiveeran priyamani
By Edward Sep 09, 2021 11:20 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் கிராமத்தை பற்றிய கதைகளமாக உருவாகிய படங்கள் நல்ல வர்வேற்பை பெற்று வந்தது. அதில் தனிவகையான கதையோடு இயக்குநராக பிரபலமானவர் இயக்குநர் அமீர். நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தான் அமீர்.

இதற்கு பின் ஜீவானின் ராம் படத்தினை வைத்து அம்மா மகன் அன்பினை வெளிப்படுத்தி ஹிட் கொடுத்தார். இதற்கு பிறகு அமீர் மீது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படமான பருத்தி வீரன் படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன் நடித்து வெளியிட்டார். மிகப்பெரிய ஆச்சரியத்தையும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்தது. இப்படத்தால் கார்த்திக்கு பெரிய இடத்தினையும் பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் கற்ப்பழிக்கப்பட்ட காதலியை தான் தான் கொண்றதாக கதை எடுத்திருப்பார்கள். ஆனால், கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு 8 சீன்களை தயார் படுத்தி வைத்துள்ளார் அமீர். டைசியாக கதாநாயகியை கற்பழிக்க வரும் வில்லன்களை நடிகர் கார்த்தி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வது போல் வைத்திருந்தார்களாம்.

பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் கார்த்தி அவரது சித்தப்பாவிடம் எப்படியாவது சென்ட்ரல் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என அவரது ஆசையை கூறியிருப்பார். இதற்குதான் வில்லன்களை இறுதியில் கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வது போன்றும் அமைத்தார்களாம் ஆனால், இறுதியில் இப்படியொரு கிளைமேக்ஸை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.