திருமணத்திற்காக முகூர்த்தம் பார்க்கும் பிக்பாஸ் நடிகை பாவ்னி.. காதல் குழப்பத்தில் அமீர்..
பிக்பாஸ் 5 சீசன் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் ஜோடி பாவ்னி - அமீர். சீரியல் நடிகையாக இருந்து வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை பாவ்னி ரெட்டி. நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டில் எண்டிரி கொடுத்த நடன இயக்குனர் அமீருடன் காதல் ஏற்பட்டு சர்ச்சையிலும் சிக்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னும் இருவரும் ஜோடியாக செல்வது லைவ் ஷோ செய்வது என்று இருந்து வந்தனர். அதன்பின் பிபி ஜோடிகள் 2 சீசனில் இருவரும் ஜோடி போட்டு ஆடி வந்தனர். அமீர் தன் காதலை பல முறை வெளிப்படுத்தியும் பாவ்னி அதனை தவிர்த்து வருகிறார்.
கடந்த எபிசோட்டில் கூட அமீர் பாவ்னிக்கு மோதிரம் போட்டுவிட்ட காட்சியில் வைரலானது. தற்போது ஒரு பேட்டியொன்றில் இருவரும் கலந்து கொண்டு எமோஷனலாக பேசியுள்ளனர்.
எப்போது அமீர் காதலை ஒப்புக்கொள்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவ்னி, அதற்காக முகூர்த்தம் பார்த்து வருவதாகவும் கல்யாணம் செய்ய முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இருவருக்கு இப்படியான பாண்ட் உருவானது எனக்கே தெரியவில்லை என்று பாவ்னி கூறியுள்ளார்.