தாம்பத்திய வாழ்க்கை வேணும்.. பசங்க காலேஜ் போனதும் கல்யாணம் பண்ணுவேன்!! பவன் கல்யாணின் முன்னாள் மனைவி..
ரீல் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களில் ஒரு ஜோடி தான் பவன் கல்யாண் - ரேணு தேசாய். பத்ரி படத்தில் ஒன்றாக நடித்து வந்த இருவருக்கும் காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகன் பிறந்துள்ளது. திருமணத்திற்கு பின் ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தத இரு ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் தன் இரு மகள்களை வளர்ந்து அவர்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், இரண்டாம் திருமணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இரண்டாம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கண்டிப்பாக 2ஆம் திருமணம் செய்து கொள்வென் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயம் திருமணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயலால் இரு குழந்தைகள் தனியாக இருக்கும் சூழல் உருவாகும் என்பதாலும் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு நானும் இல்லை என்றால் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம் என்று தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன்.
2 அல்லது 3 ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள், கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் கண்டிப்பாக 2. 3 ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன், எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும், எல்லா தாம்பத்திய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாகவும் நடிகை ரேனு தேசாய் தெரிவித்துள்ளார்.