பார்த்தவுடன் ஈர்ப்பு வந்துவிட்டது.. எனக்கு மகிழ்ச்சிதான்!! நடிகை சமந்தாவின் புது பிசினஸ்...
சமந்தா
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர்.
இதனையடுத்து சமந்தா தன்னுடைய சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். தற்போது சினிமா, ஹல்ட் டிப்ஸ்கள் தாண்டி சமந்தா விளையாட்டிலும் கால் பதித்திருக்கிறார்.
உலக Pickleball போட்டி வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25வரை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் உலக பிக்கில்பால் லீக் அமைப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். அதற்கு காரணம் சென்னை அணியின் உரிமையை நடிகை சமந்தா பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமந்தா பேசுகையில், Pickleball விளையாட்டை முதன்முதலில் பார்த்த போதே அதன்மீது எனக்கு ஈர்ப்பு வந்துவிட்டதாகவும் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பிக்கில்பால் விளையாட்டில் பெண்களை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.