யோகி பாபுவால் வீடு போச்சு, குடும்பத்தில் பிரச்சனை, புலம்பிய தயாரிப்பாளர்
யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரம். இவர் இல்லாத படங்களே இல்லை என்பது போல் வாரத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யோகி பாபுவிற்கும் பிரபல பத்திரிகையாளர்களுக்கும் சில நாட்களாக சண்டை போவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் யோகிபாபு அந்த பத்திரிகையாளர்கள் பணம் எதிர்ப்பார்த்தார்கள், நாம் கொடுக்காததால் இப்படி பேசுகின்றனர் என்றார்.
அதை தொடர்ந்து அந்த பத்திரிகையாளர்கள் ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்தே யோகி பாபு குறித்து பேச வைத்து விட்டனர்.
இதில் லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சுவாமிநாதன், யோகி பாபுவிடம் 8 நாள் தான் கால்ஷிட் கேட்டோம், அதற்கே ஒரு வருடம் எங்களை அலையவிட்டார். இதனால் என் அக்காவின் வீட்டையே விற்கும் நிலை ஏற்பட்டது.
முழுப்பணத்தையும் கொடுத்தேன், ஆனால், அவர் ஒழுங்கா ஷுட்டிங் வரவில்லை, யோகி பாபுவால் என் வீட்டிலே பிரச்சனை ஏற்பட்டு, பல நாட்கள் காரிலேயே உட்காந்து அழுதேன் என்று பேசியுள்ளார்.