டிராகன் 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகா மாறுவாரா பிரதீப்?
டிராகன்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சென்சேஷனல் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.
அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலரும் இப்படத்தில் நடத்து, மாபெரும் அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
3 நாட்கள்
இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை விமர்சனத்தையும் பெற்றது. தற்போது டிராகன் படம் ரிலீஸாகிய 3 நாட்கள் முடிவில் 47 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். மூன்றாவது நாளான நேற்று பிப்ரவரி 23 ஆம் தேதி மட்டும் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது டிராகன் படம்.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் குழுவிலும் இணையவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.