வரதட்சணை கொடுமையால் விவாகரத்து! 12 வருடத்திற்கு பின் இரண்டாம் திருமணம் செய்யும் பிரசாந்த்!
தமிழ் சினிமாவில் 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் அறிமுக நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இதையடுத்து முன்னனி இயக்குநர்கள் நடிகைகள் படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நடித்து வந்த பிரசாந்த் 2006ல் வெளியான அடைக்களம் படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இதற்கு காரணம் அவரது திருமண வாழ்க்கை தானாம் என்று கூறப்படுகிறது. 2005ல் குடும்பத்தார் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிற்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் 2007ல் திருமணம் செய்து கொண்டார் எனவும் ஒரு வருடம் கழித்து 1998ல் திருமணத்தை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து கிரகலட்சுமி பிரசாத் என்பவரை விவாகரத்து செய்துள்ளார். இது பிரசாந்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரசாந்த் விவாகரத்திற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சன்ணை கொடுமை, வன்கொடுமை என புகாரளித்து நீதிமன்றல் கூறியுள்ளார். இதற்கிடையில் 4 ஆண்டுகளாக நீதிமன்ற வாதத்திற்கு பிறகு அதாவது 2009 ஏப்ரல் 30 விவாரத்து கொடுத்து நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து பிரசாந்த் தொழிலில் அதிக கவனம் செலுத்தி 2011ல் மீண்டும் படத்தில் நடிக்க துவங்கினார். தற்போது தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்தும் வருகிறார். விரைவில் அவர் நடித்து வரும் அந்தகன் படத்தின் வேலைகள் முடிந்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதை அவரது தந்தை தியாகராஜன் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
பெண் பார்த்து முடிவு செய்துவிட்டதாகவும் இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் விரைவில் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வருட இறுதிக்குள் பிரசாந்திற்கு திருமணத்தை முடிக்கவுள்ளாராம் தியாகராஜன்.