தப்பான ரிலேஷன்ஷிப்பில் இருந்து நம்பி ஏமாந்து போனேன்!! உண்மையை உடைத்த நடிகை பிரியா பவானி சங்கர்
செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் சீரியலில் நடிகையானார் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார். தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்டநாள் நண்பர் ராஜ் வேல் என்பவரை காதலித்து அவருடன் அவுட்டிங் சென்று வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியொன்றில், நான் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நல்லவன் என்று நினைத்தவன் மிகவும் மோசமானவனாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வந்ததால் அவனுடன் இருக்க முடியாமல் பிரேக் அப் செய்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
என்னிக்காவது உசாராக இருந்திருக்கலாமே என்றும் அப்பவே அப்பா, அம்மா, அண்ணன் சொன்னாரே அப்பவே கேட்டு இருக்கலாமே என்றும் தோணும். அதுதான் என்னுடைய எமோஷ்னல் விசயம் என்று கூறியிருக்கிறார். அதன்பின் தான் ராஜ் வேலுடன் காதலில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.