லிவிங் ரிலேஷன்ஷிப் எல்லாம் ஓவர்.. அப்போ அவர தான் பிரியா பவானி திருமணம் செய்யப்போகிறாரா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர், நான் சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் ரத்னவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாக இருப்பதாலே தள்ளிப் போட்டு வருகிறோம் என்றும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாக பிரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார்.