அந்த இடத்தில் டேட்டூ குத்த டார்ச்சர் செய்த தயாரிப்பாளர்.. பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை பிரியாமணி
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் கண்களால் கைது செய். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியாமணி.
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் அமீரின் பருத்தி வீரன் படத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்திற்காக தேசிய விருதினை சிறந்த நடிகைக்காக பிரியாமணி பெற்றார்.
தேசிய விருது நடிகை
முத்தழகு கதாபாத்திரம் இன்று வரையில் தமிழ் ரசிகர்களை ஈர்த்து வந்த ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. இப்படத்தினை அடுத்து தமிழில் சிறப்பாக வளர்ந்துவிடுவார் என்று எதிர்ப்பார்த்தவர் அப்படியே காணமல் போய்விட்டார். நல்ல கதைக்களம் கிடைக்காமல் பாலிவுட் பக்கம் வரை சென்று குத்தாட்டம் போட்டார்.
தற்போது ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தயாரிப்பாளரின் தொல்லையை பற்றி கூறியுள்ளார்.
வறுபுறுத்திய தயாரிப்பாளர்
ஒரு தெலுங்கு படத்தின் போது வயிற்றிற்கு கீழ் தொப்புள் அருகே ஒரு பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று வறுபுறுத்தினார். என்னால் முடியாது என்று சொல்லியும் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்துள்ளார் அந்த தயாரிப்பாளர்.
வேறுவழியின்றி அதை செய்து நடித்து கொடுத்தேன் என்று கூறியுள்ளார் பிரியாமணி. மேலும், சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை செய்வதை தவிர்க்க முடியாத சூழல் இருப்பதாகிவிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.