திருமணமாகி ஒரே ஆண்டில் கணவரை பிரிந்த பிரியங்கா நல்காரி!! உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு..
சின்னத்திரை நட்சத்திரங்கள் சக நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி பின் காதலித்து திருமணம் செய்து வருவது அதிகரித்துள்ளது. ஆனால் ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இதற்கு தான் ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்று பலர் ஷாக்கானார்கள்.
குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரிவை விமர்சித்தும் வந்தனர். என் குடும்பத்தினர் சம்பதம் இருந்ததாகவும் ராகுல் வீட்டில் திருமணத்தில் மகிழ்ச்சியில்லை என்றும் பிரியங்கா தெரிவித்திருந்தார்.
அதன்பின் மீண்டும் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா, திருமணமாகி ஒரு வருடமாகிய நிலையில் கணவரை பிரிந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. தன்னுடைய கணவர் புகைப்படங்களை டெலீட் செய்திருந்த பிரியங்கா, தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலக இருப்பதாகவும் அந்த கணக்கை டெலீட் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். எனக்காக ஒருசிலர் பிரமோஷன் செய்ய சாரீஸ், ஜுவல்ஸ் என அனுப்பி இருக்கிறீர்க்ள்.
எனக்கு அவர்கள் அளித்ததை டிஎம் செய்யுங்கள், அதை திருப்பி அனுப்பிவிடுகிறேன் என்றும் நான் இனி நெகட்டிவ் விசயத்தில் இருந்து விலகி இருக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவை ஏன் எடுத்தார் என்றும் கணவரை பிரிந்துவிட்டதால் தான் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகவும் சிலர் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.