ரூம் போட்டு நடிகைகளை தேடிய இயக்குநர்! மேடையில் உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகளில் அறிமுகங்கள் அதிகரித்து வருகிறது என்று பல காலங்கள் குறையாக கூறி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். முன்னணி நடிகர்கள் படமாக இருந்தாலும் சரி சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி நடிகைகள் பெரும்பாலும் தமிழ் பேசும் நடிகைகளாக இருப்பதில்லை.
அதை கண்டித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அடங்காமை படத்தின் விழாவில் மேடையில் பேசியுள்ளார். தர்பார் படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மீது வருத்தம். தமிழகத்தில் எடுக்காமல் மும்பையில் ஏன் எடுத்தார் அவர் என்று கூறியுள்ளார். மேலும், சில இயக்குநர்கள் மும்பைக்கு சென்று ரூம் போட்டு நடிகைகளை தேடுகிறார்கள்.
அது எதற்கு என்று தெரியவில்லை என்று ஓப்பனாக இயக்குநர்கள் பற்றி விளாசி பேசியுள்ளார் கே. ராஜன்.
தமிழகத்தில் முதலில் தமிழர்களுக்கு தான் வேலை கொடுக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் போது மற்ற மொழிக்காரர்களுக்கு வேலை கொடுக்கலாம். ஆனால் தமிழகத்தில் இன்று பிற மொழி பேசுபவர்களுக்கு தான் எந்த வேலையாக இருந்தாலும் கொடுக்கப்படுகிறது.