நயன்தாரா குழந்தைகளின் ஆயாவிற்கும் தயாரிப்பாளர் தான் செலவு செய்யவேண்டுமா.. பத்திரிகையாளர்கள் கூறிய ஷாக்கிங் தகவல்
நடிகை நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவையும் தாண்டி இந்தியளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணமாக ஜவான் படம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்றை பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகி இருவரும் கூறியுள்ளனர்.
முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பில் தனக்காக வேலை செய்யவரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தரமாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகி இருக்காரோ, அப்படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தருவார்களாம். அதே போல் திருமணத்திற்கு படப்பிடிப்பிற்கு தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறோம்.
அப்போது நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் தருவார்களாம். இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது என்னடா தயாரிப்பாளருக்கு வந்த சோதனை என பலரும் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த நிலைமை. மலையாளத்தில் ஒரு நடிகர், நடிகைக்கு சம்பளம் என பேசிவிட்டு அக்ரீமண்ட் போட்டுவிட்டால் அவ்வளவு தான். அந்த நடிகர், நடிகைகள் அழைத்து வரும் துணை ஆட்களுக்கு அந்தந்த நடிகர்கள் தான் செலவு செய்வார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் தான் இப்படி செய்து வருகிறார்கள் என மூத்த பத்திரிகையாளர்கள் பிஸ்மி மற்றும் அந்தணன் பேசியுள்ளனர்.
நயன்தாரா மட்டுமின்றி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க வந்தபோது கூட, இப்படியொரு கண்டிஷன் போட்டு தன்னுடன் வந்த துணை ஆட்களுக்கு தயாரிப்பாளரை தான் செலவு செய்ய வைத்தாராம்.
மேலும் இந்த லிஸ்டில் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின் போது தன்னுடைய 18 பேரை அழைத்து வந்தாராம் விஷ்ணு விஷால். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார் என கூறியுள்ளனர்.