இனிமேல் தினேஷுடன் வாழப்போவதில்லையா!! விவாகரத்து பற்றி நடிகை ரச்சிதா மறைமுக தாக்குதல்...
சின்னத்திரை சீரியல்களில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தினேஷ் - ரச்சிதா மகாலட்சுமி. 2015ல் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பிக்பாஸ் 7 சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் தினேஷ்.
சிறப்பாக விளையாடி வரும் தினேஷ், வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான் என் வாழ்க்கையில் பெரிய இக்கட்டான சூழல் என்றும் நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களுக்கான அடையாளமும் அனைவருக்கும் தெரியும்.
கணவன் மனைவிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள் தான் எங்களுக்கும் நடந்தது என்று கூறியிருந்தார். இதுபற்றி பலரும் தினேஷுக்கு ஆதரவாக பேசி, ரச்சிதாவை சேர சொல்லி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை ரச்சிதா சமீபத்தில் பகிர்ந்த ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எல்லோரும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு நாம் உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்போம் என்று யாரும் யோவிக்கவே இல்லை, பட்டவர்களுக்கு தான் அதோட வலி தெரியும் என்று பகிர்ந்திருக்கிறார். இதனால் தினேஷுடன் ரச்சிதா இனிமேல் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக கூறியதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
