தினேஷை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரச்சிதா!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி போட்ட பதிவு..
சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் குழந்தை இல்லை என்பதாலும், தினேஷ் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் செய்திகள் கசிந்தது.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது.
ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார். இந்நிலையில், ரச்சிதா அவரது சமுகவலைத்தள பக்கத்தில் சில பதிவுகளை போட்டு ஷாக் கொடுத்தால்.
அதில், எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது, மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும் என்ற முக்கிய கருத்தினையும் குறியிருக்கிறார். இதை பார்க்கும் போது ரசிகர்கள் மத்தியில் விவாகரத்துக்கு தயாராகிவிட்டாரா ரச்சிதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
