சீரியலை விட்டு நீங்களே அனுப்பிடுவீங்க போல! கடுப்பாகிய சீரியல் நடிகை ரக்ஷிதா மகா..
தொலைக்காட்சி தொடரில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலில் ஒன்று நான் இருவர் நமக்கு இருவர். செந்தில், ரக்ஷிதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார். தற்போது மாறன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி மாயனுக்கு வில்லனாக கதை சென்றுள்ளது.
மாயன் அவர்கள் குடும்பத்துடன் வெளியேறி சென்று விடுகிறார்கள். இந்நிலையில் சில நாட்களாக மஹா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரக்ஷிதா மகாலட்சுமியின் காட்சிகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சிரியலில் இருந்து விலகி விட்டாரா என்று கேள்வி கேட்டு கொண்டே வந்துள்ளனர். அதற்கு ரக்ஷிதா, சீரியலில் இருந்து போறாங்க போறாங்கனு சொல்லி சொல்லி என்ன நீங்களே போக வச்சுடுவீங்க போலயே.. என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கதை மாறி பழைய வீட்டிற்கு சென்றுள்ளதாக செய்திகள் பரவியது. ஏற்கனவே, சரவணன் மீனாட்சி சீரியல் எடுக்கப்பட்ட வீட்டில் நடிகை ரக்ஷிதா எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அதே தூண், அதே மாடி, அதே கதவு, அதே வீடு ஆஹா மறுபடியுமா என்று கூறி வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைத்தில் மாயனின் தந்தை புகைப்படம் இருப்பதும் படப்பிடிப்பில் செந்தில் பின் பக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது. மாறனால் வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களின் பழைய வீட்டிற்கு செல்வது போன்று கதை மாறுப்போவதாக தெரிகிறது.