விநாயகர் சதுர்த்தி : அம்பானி மருமகள் ராதிகாவின் பரதநாட்டிய நடனம்..
அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையிலுள்ள ஆண்டிலியா இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சிலையை ஆண்டிலியா இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பாரம்பரிய முறையில் அதனை வரவேற்றனர்.

மேள தாளங்கள் முழங்க இந்த வரவேற்பு நடந்தநிலையில், ல்மான் கான், கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியின்போது அம்பான்யின் மருமகளும் ஆனந்த் அம்பானியின் மனைவியுமான ராதிகா மெர்ச்சண்ட், விநாயரை போற்றும் ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார். சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களான ஆடையணிந்து பாரம்பரிய நகைகள், தலியரங்காரத்தை அணிந்து ஆடிய ராதிகாவின் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.