தாலி கட்டிய இரண்டாம் பொண்டாட்டியை கைநீட்டிய கோபி.. திருமணமாகி ஹனிமூனில் அவமானப்பட்ட ராதிகா..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு கிடைத்த நேரத்தில் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி.
ராதிகவுடன் இரண்டாம் திருமணம்
திருமணத்தை முடித்த கையோடி ஊட்டி ஹனிமூனிற்கும் ராதிகாவை கூட்டிச் சென்றுள்ளார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி மகாசங்கமம் ஆரம்பிக்க கோபியின் சுயரூபத்தை மூர்த்தி உள்ளிட்டவர்கல் அறிந்து கடுமையாக அசிங்கப்படுத்தியிருந்தார்.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் ராதிகாவும் கோபி மீது கோபப்படுகிறார். இது பக்கம் முடிந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் ராதிகாவை விட்டுவிட்டு பாக்யாவை மேடையில் கூப்பிட்டு கெளரம் செய்ததையும் ராதிகாவால் தாங்க முடியவில்லை.
நிம்மதியில்லா ஹனிமுனில் கோபி
இதனால் ரூமிற்கு வந்ததும் கோபியிடம் வாக்குவாதம் செய்ய, கோபத்தில் எல்லைமீறி ராதிகாவிடம் கை நீட்டியுள்ளார். ராதிகாவின் இந்த செயலால் கடுப்பாகி ரூமை விட்டு வெளியேறி புலம்பியிருக்கிறார் கோபி. இதற்கு பாக்யாவே பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு கோபியின் மைண்ட் வாய்ஸ்-ஆக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
என்ன கோபி.. சந்தோசமா இருக்கீங்க போல.. ??
— Vijay Television (@vijaytelevision) October 19, 2022
பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி மகா சங்கமம் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #Baakiyalakshmi #MagaSangamam #VijayTelevision pic.twitter.com/4ikdPVZYS3