நகைக்கு பதில் பூவால் துப்பட்டா!! வியப்பில் ஆழ்த்திய அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்..
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். நிச்சயதார்த்தம் நடந்தது முதல் இன்று வரை இந்தியா முழுவதும் அம்பானி குடும்ப நிகழ்ச்சியை பார்த்து வியந்து வருகிறார்கள்.
அப்படி கடந்த 2 வாரமாக திருமணத்திற்கு முன் கொண்டாடும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. மெஹந்தி, சங்கீத் நிகழ்வை தொடர்ந்து தற்போது ஹல்தி நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்து வந்த ஆடையை பார்த்து அனைவரும் வியந்து வருகிறார்கள். 90 ஜெண்டா மலராலும், 1000 மல்லிப்பூவாலும் வடிவமைக்கட்ட துப்பட்டாவை அணிந்து வந்துள்ளார் ராதிகா.
தற்போது அம்பானி அணிந்து வந்த ஆடையை பார்த்த நெட்டிசன்கள் அம்பானி சொத்து மதிப்புக்கு தங்க ஆடை கூட அணியாமல் மருமகள் எப்படி எளிமையாக இருக்கிறாரே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.




