வீட்டில் ஒரு முகம்.. வெளியே ஒரு முகம்!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி மதிப்பில் பெரிய பங்களா கட்டி குடியேறிவிட்டார். லதாவை திருமணம் செய்து கொண்டது முதல் தற்போது வரை தன் குடும்பத்துடன் அங்கு தான் வசித்து வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, இரண்டாம் மகள் செளந்தர்யா இருவரும் சென்னையில் தங்களுக்கு என்று ஒரு வீட்டினை கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டனில் நடப்பது என்ன என்ற விவகரத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். போயஸ் கார்டன் வீட்டின் முழு நிர்வாகத்தையும் ரஜினிகாந்தின் மனைவி லதா தான் பார்த்து வருகிறார். எல்லா முடிவையும் எடுப்பதோடு ரஜினியை யாராவது சந்திக்க விரும்பினால் அதை பரிசீலித்து நேரத்தை ஒதுக்குவதும் லதா தானாம்.
அப்படி ரஜினிகாந்தை பார்க்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும்? என்பது முதல் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? என்பது வரை லதா தான் முடிவு எடுப்பார். வீட்டில் இருக்கும் போது ஒரு முகமும் வெளியில் இருக்கும் போது ஒரு முகத்தையும் ரஜினிகாந்த் காட்டுவார் என்று சில பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். மரியாதை நிமிர்த்தமாக அவரை பார்க்க விரும்பினால், லதா ரஜினிகாந்தின் பரிசீலனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி அனுமதி வாங்கு வருபவர்களுக்கு டீயோ, காஃபியோ வரும். அதிகபட்சம் 2 நிமிடம், ரஜினி வருவார், நல்லா இருக்கீங்களா? என இரு வார்ட்தை பேசுவார், அவ்வளவு தான். அதற்கு மேல் அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். மேலும், ஒருவரை சந்திக்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வர சொன்னால் அங்கு மிகவும் ஜாலியாகவும் எல்லாவற்றையும் ரஜினி பேசுவார்.
தன் வாழ்க்கை, வெற்றி, தோல்வி, வாழ்வில் சந்தித்த அனுபவங்கள், நடப்பு அரசியல் போன்ற எல்லாவற்றையும் பேசுவார். அதேபோல் கோபப்பட்டு வாய்க்கு வந்தபடி பேசிவிடுவோம் என்பதால் தான் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்து சென்று விடுவார் ரஜினிகாந்த் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.