8 பெண்களை வசியப்படுத்தி அப்படி நடந்த முனீஸ் ராஜா, என் மகளை கூட.. ராஜ்கிரண் சொன்ன பகிர் தகவல்
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா இரண்டு வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் ஜீனத் பிரியா, முனீஸ் தன்னை கொடுமை படுத்துவதாகவும், குடித்துவிட்டு துன்புறுத்தியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராஜ்கிரண் தனது மகள் குறித்து பேசியுள்ளார். அதில், முனீஸ் ராஜா பணக்கார பெண்களை குறிவைத்து ஏமாற்றுவதை வேலையாக வைத்து இருக்கிறான். அதற்காக கொல்லி மலையிலிருந்து வசிய மருந்துகளை வரவழைத்து பெண்களுக்கு கொடுத்த வசியம் செய்வார்.
இதுவரை 7,8 பெண்களை முனீஷ் ராஜா வசியப்படுத்தி ஏமாற்றி இருக்கிறார். அவருக்கு அவருடைய குடும்பத்தாருக்கும் இது தான் வேலையே. என்னுடைய மகள் ஜீனத்தை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது.
நான் இப்போது தனி ஒரு வீடு எடுத்து மகளை தங்கவைத்து பார்த்துகொள்கிறேன். முனீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரும் என்னுடைய மகளை ரொம்ப துன்புறுத்தி உள்ளனர். பணத்திற்காக மட்டுமே என்னுடைய மகளை முனீஸ் அழைத்து சென்றார் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.