நாங்க Love-லாம் பண்ணல, ரக்ஷ்சனுடன் அப்படி தான் இருந்தேன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜே ஜாக்குலின்..
விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் விஜே ஜாக்குலின். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியிருக்கிறார். என்னோடு காதல் கிசுகிசுவில் ரக்ஷனோடு பேசும் போது அதற்கான பதிலை நான் கொடுத்திருக்க மாட்டேன்.
ஏனென்றால், ஒரு விசயம் நடக்கவே இல்லை, அப்போ எதுக்கு பதில் சொல்லணும் என்று தோன்றும். தர்ஷன் எனக்கு நல்ல ஃபிரெண்ட், அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல ஃபிரெண்ட் என்று கூறியிருந்தார். ரக்ஷன் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட், ஏன் தப்பு தப்பா பேசி வீடியோ போடுறீங்க என்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு அதுதான் ரியாலிட்டி என்று பலர் நினைத்து கொண்டு கருத்துக்கள் தெரிவிப்பதை நான் கண்டுக்கொள்ளவே மாட்டேன் என்று கடுப்பாகி பதிலளித்திருந்தார்.
திருமணத்திற்கு முன் இரண்டு நடிகர்களுடன் நெருக்கமான உறவில் இருந்த நடிகை சிம்ரன்.. அப்படியொரு நெருக்கமாம்
இந்நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் ரக்ஷனை வரவழைத்து வதந்திகளுக்கு அப்படியே முற்றுப்புள்ளி கொடுத்திருக்கிறார் ஜாக்குலின். அதில் கலக்கப்போவது யாரு 5 சீசனில் 4 எபிசோட் மட்டுமே எங்களுக்கு டார்க்கெட்டாக கொடுத்தார்கள். நல்லா பண்ணவில்லை என்றால் தூக்கிவிடுவோம் என்று மிரட்டினார்கள். அந்த சீசன் சமயத்தில் தான் ரக்ஷன் - ஜாக்குலின் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற ரூமர் செய்திகள் பரவியது.
எங்க போனாலும் ஒரு போட்டோ எடுத்தாலும், குழந்தை வைத்து போட்டோ எடுத்தாலும் இருவருக்கும் குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்லுவார்கள். ஆனால், நிஜமாகவே எனக்கு கலக்கப்போவது யாரு சமயத்தில் நாங்கள் எனிமி. நிறைய சண்டை இருக்கும், எனக்கு அவனை பிடிக்காது, அவனுக்கு என்னை பிடிக்காது, சொல்லப்போனால் இருவருக்கும் போன் நம்பரே தெரியாது.
சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் இருவருக்கும் சண்டை வரும். இருவரும் ஒன்றாக வேலை செய்வதை விட்டோம் அப்போது தான் இருவரும் நண்பர்களாக மாறினோம் என்று ஜாக்குலின் - ரக்ஷன் ஓப்பனாக பேசியிருக்கிறார்.