திருமணமாகி நான்கே மாதத்தில் 250 கோடி கடன்!! வீட்டை விற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது இந்தி படங்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னாணியை காதலித்து சமீபத்தில் கோவாலில் ஆடம்பர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையை தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங், அதன்பின்பும் படங்களில் நடித்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர், வாசு பக்னானியின் பூஜா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்த தயாரிப்பு நிறுவனம் கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1, பீவி நம்பர் 1 போன்ற வெற்றிப்படங்களை தயாரித்திருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அந்நிறுவனம் தயாரித்த படங்கள் தோல்விகளை சந்தித்து வந்ததால் பெரும் கடன் சுமையில் சிக்கியிருக்கிறார்கள்.
சுமார் 250 கோடிக்கும் மேல் கடன் இருப்பதால் அதை சமாளிக்க முடியாமல் ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி, தன்னுடைய சொந்த 7 மாடி கட்டிடத்தை விற்பனை செய்திருக்கிறார்.
மேலும் தன் அலுவலகம் மும்பை ஜுஹு பகுதிக்கு மாற்றியுள்ளார். திருமணமாகி 4 மாதத்தில் கணவருக்கு இப்படியொரு கடன் சுமையில் சிக்கியதால் ரகுல் ப்ரீத் சிங் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.