10 வருஷத்துக்கு பின் கர்ப்பம்!! கருமுட்டை குறித்த ரகசியத்தை உடைத்த நடிகர் ராம் சரணின் மனைவி
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருபவர் சிரஞ்சீவி. இவரை தொடர்ந்து அவரது மகன் ராம் சரணை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். படங்களில் அடுத்தடுத்து நடித்து சமீபத்தில் ஆர் ஆர் ஆர், ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ராம் சரண் உபசனா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில் 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் 10 வருடம் கழித்து உபசனா கர்ப்பமாகியுள்ளதாக ராம் சரணின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த விசயத்தை கேள்விப்பட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ராம் சரணின் மனைவி உபசனா அளித்த பேட்டியில், திருமணமாகிய புதிதில் கருமுட்டையை பாதுக்காத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
10 வருடங்களுக்கு பின் இந்த ரகசியம் வெளியில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.