நடிகை ரம்பாவின் கணவர் ஈழத்தமிழரா? ரம்பா மகள் மற்றும் நடிகைகளுக்கு இரவு பார்ட்டி கொடுத்த பிரபுதேவா..
90களில் கொடிக்கட்டி பறந்த் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அளித்தா என்ற படத்தில் நவரச நாயகன் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதை தொடர்ந்து செங்கோட்டை, சிவசக்தி, அருணாச்சலம், அடிமை சங்கிளி போன்ற அந்த காலத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.
அதன்பின் அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், மின்சாரா கண்ணா போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த ரம்பா 2010ல் இந்திரன் பத்மநாதன் என்ற கனடா வாழ் இலங்கை ஈழத்து இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குன்பிறகு சினிமாவை விட்டுவிட்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். மூன்று பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் ரம்பா.
சமீபத்தில் மீனாவின் கணவர் மறைந்த போது இறுதி சடங்கில் கண்வர் மற்றும் மூத்த மகளுடன் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் பிரபு தேவா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மனைவியுடன் சேர்ந்து இரவு பார்ட்டி கொடுத்துள்ளார்.
அதில் மீனா, குஷ்பு, சன்கிதா, சங்கவி உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படத்தை ரம்பா அவரது சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



