அந்த நடிகைகள் எல்லாம் திமிரு பிடித்தவர்கள்.. ஆனால் திரிஷா!! ஓப்பனாக பேசிய நடிகை ரம்பா..
90ஸ் காலக்கட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ரம்பா, திருமணம் செய்து கணவருடன் வெளிநாட்டில் செட்டிலாகினார். மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை ரம்பா மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பி இருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு மிகவும் பிடித்த நபர் என்றால் அது நடிகை செளந்தர்யா என்றும் நடிகை மகேஸ்வரி என்னுடைய சிறந்த தோழி என்றும் கூறியிருக்கிறார். திரைத்துறையில் மிகவும் நெருக்கமான தோழிகள் யாரும் இல்லை. எந்த காட்சியிலும் டயலாக் பேசுவதிலும் ரம்யா கிருஷ்ணனனை பார்த்தால் பயம்.
மேலும் நயன்தாரா, திரிஷா, இலியானா, காஜல் போன்ற நடிகைகள் இருந்தாலும் திரிஷாவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை ஓரிரெண்டு முறை தான் சந்தித்துள்ளேன். உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மற்ற நடிகைகள் அப்படி கிடையாது, என்னை பார்த்தாலும் கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவார்கள் என்று ரம்பா கூறியிருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/121fde48-3557-4af1-8f9f-52a260286e5d/24-667fc1331a10a.webp)