சம்பளத்தை கோடியில் உயர்த்தி பணத்தில் புரளும் விஜய் பட நடிகை..
கன்னட படத்தில் அறிமுகமாகி தெலுங்கு தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை குறுகிய காலக்கட்டத்தில் எட்டியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வரவேற்பு பெறமுடியாமல் போனால். இதன்பின் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்ட்டில் இணைந்த ராஷ்மிகா புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் மார்க்கெட் எகிற காரணமாக இருந்தது.
இந்நிலையில் பாலிவுட் படவாய்ப்புகள் வர ஆரம்பித்ததால் தென்னிந்திய படங்களுக்கு 2 கோடி வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது 3 கோடியும் பாலிவுட் படங்கள் என்றால் 4 கோடி சம்பளமும் உயர்த்தி கேட்டு வருகிறாராம். தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கோடி சம்பளத்தில் நடித்து வருகிறார்.