"அவர்களை நம்ப பயமாக இருக்கிறது".. ராஷ்மிகா இப்படி சொல்லிட்டாரே!!

Rashmika Mandanna Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 13, 2024 01:52 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாரவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய்யின் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியா அளவில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

"அவர்களை நம்ப பயமாக இருக்கிறது".. ராஷ்மிகா இப்படி சொல்லிட்டாரே!! | Rashmika Mandanna Tweet Goes Viral On Internet

பதிலடி

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா, நெட்டிசனின் ஒரு பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவை பகிர்ந்து, "ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ராஷ்மிகா, "திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது = பயமாக இருக்கிறது.. ஆனால் எல்லாரும் அப்படி இல்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள் . அந்த மனிதர்களை நம்புவது =சிறப்பு என்று பதில் அளித்துள்ளார்.