3 எழுத்து இட்லி நடிகைன்னு சொன்ன ரவி மோகன்!! நடிகை குஷ்பூ போட்ட பதிவு...
நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே கடந்த 2009ல் திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகிய நிலையில், கடந்த ஆண்டு ரவி மோகன் விவாகரத்து வழக்கை தொடர்ந்தார். இதில் ஆர்த்திக்கு உடன்பாடில்லை என்று கூறி வரும் நிலையில், ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதனையடுத்து பல பிரச்சனைகள் மறைமுகமாக இருதரப்பினரும் இன்ஸ்டாகிராமில் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், கெனிஷா இரு வீடியோக்களை வெளியிட்டார்.
அதனையடுத்து சென்னையை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்தார். இன்று ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, தன்னுடைய மனைவி ஆர்த்தி தரப்பில் கொடுத்த அநீயாயங்கள் பற்றி பேசிய அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இட்லி நடிகை
அதிலும், நடிகையின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் 3 எழுத்து இட்லி நடிகைஎன்னைப் பற்றி பேச உனக்கு அருகதை இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ, எக்ஸ் தள பக்கத்தில், நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
மூன்றெழுத்து நடிகை தன் வாழ்க்கை பற்றி தவறாக ரவி மோகன் குற்றம்சாட்டிய நிலையில் நடிகை குஷ்பு x தளத்தில் பதிவு செய்திருப்பது, ஒருவேளை நீங்கள் தானோ என்றும் சிலர் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊
— KhushbuSundar (@khushsundar) May 16, 2026