அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்ட சாச்சனா!! வீட்டைவிட்டு வெளியேற்ற இப்படியொரு காரணமா..
பிக்பாஸ் சீசன் 8
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் நேற்று அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
போட்டியாளர்களிடம் தன்னுடைய ஸ்டைலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி நிறைவடைந்த போது, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எவிக்ஷன் இருக்கும் என்று கூறி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து சென்றார் விஜய் சேதுபதி.
சாச்சனா எவிக்ட்
அதன்படி இன்று பிக்பாஸ் சீசன் 8 வீட்டைவிட்டு சாச்சனா எவிக்ட்டாகி வெளியேறியிருக்கிறார். இதற்கான காரணம் பலர் யூகித்து கருத்துக்களை கூறியநிலையில், தற்போது முக்கிய காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. பெட்ரூம் விஷயத்தில், சாச்சனா உட்பட மற்றும் மூன்று பெண் போட்டியாளர்கள் தான் தங்களுக்கு சௌகரியமான பெட்ரூம் வசதியோடு இருக்கும் பக்கம் வேண்டும்.
அதனால் ஆண்கள் சொன்னது போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்கள் நமக்குள் தான் நாமினேஷன் செய்ய வேண்டியது இருக்கும் அதிலும் இந்த முடிவை எடுத்தது நாம நான்கு பேரும் தான், அதனால் நீங்கள் என்னை நாமினேஷன் செய்தால் நான் தாராளமாக வீட்டில் இருந்து போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படியொரு காரணமா
அதனால் தியாகச்செம்பளாக மாறி சாச்சனா வெளியேறியிருக்கிறார். மேலும், முந்தைய சீசன்களில் தங்களுக்கு செட்டாகாமல் வெளியேறியும் இருந்திருக்கிறார்கள். பரணி கூட இப்படி வெளியேறியது அவரின் விடுப்பமாக இருந்தது. மற்றபடி முதல் வாரம் எனச் சலுகைக்காட்டி எவிக்ஷன் இல்லை என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தது தான் வந்திருக்கிறார் பிக்பாஸ். ஆனால் இந்த சீசனில் இப்படியொரு அதிரடி நடந்திருக்கிறது.
இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்புடைய சில சோர்ஸ்களிடம் இருந்து விசாரித்தபோது,
போன சீசன் மாதிரி இரு வீடு கான்செஃப்ட் மாதிரி இந்த வருஷம் வித்தியாசமாக ஏதும் இல்லை. ஆண்கள் வெர்சஸ் பெண்கள்ங்கிற இந்த கான்செஃப்ட்டுக்கு பெரிதாக வரவேற்பௌ வரவில்லை என்பதால் அதிரடியான ஒரு தொடக்கமா இருக்கட்டுமே என்று இதை பண்ணியிருக்காங்க என்று தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்கள்.