ஆணவத்தில் ஆடிய இளையராஜா.. கோபத்தில் இசைஞானியையே அடக்கிய கே பாலச்சந்தர்..
தமிழ் சினிமாவில் 70 காலக்கட்டத்தின் இறுதியில் இசை பயணத்தை ஆரம்பித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் இசைஞானி இளையராஜா. பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து 80களில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இவர் இசை தான் எங்களுக்கு வேண்டும் என்று இயக்குனர்கள் அவர் பக்கம் தான் சென்று அவருக்காக காத்திருக்கவும் செய்வார்கள். அப்படி நல்ல ஒரு பெயரை பெற்ற இளையராஜா பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்களுடன் சண்டைபோட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.
வைரமுத்து, கங்கை அமரன், எஸ்பிபி, மணிரத்னம், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் பகையையும் சம்பாதித்து இருக்கிறார் இசைஞானி. அதேபோல் பத்திரிக்கையாளர் சந்திப்பு, கச்சேரி நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதமும் ஆணவத்தில் பேசும் பேச்சும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
இந்நிலையில் 80களில் கொடிக்கட்டி பறந்த ஜாம்பவான் இயக்குனர் கே பாலச்சந்தருக்கும் இளையராஜா இசையமைத்து கொடுத்திருக்கிறார். சிந்து பைரவியில் ஆரம்பித்து புன்னகை மன்னன், புதுபுது அர்த்தங்கள் என்று பல திரைப்படங்களுக்கு கே பாலச்சந்தருடன் பணியாற்றி இருக்கிறார் இசைஞானி.
அந்தவகையில் 1989 அன்று தீபாவளிகாக ரஜினியின் மாப்பிள்ளை, கமல் ஹாசனின் வெற்றிவிழா, சத்யராஜின் வாத்தியார் வீடு, விஜயகாந்தின் தர்மம் வெல்லும் போன்ற முன்னணி நடிகர்களின் 4 படங்கள் வெளியாகவிருந்தது.
அப்போது கே பாலச்சந்தர் இயக்கத்தில் புதுபுது அர்த்தங்கள் படமும் வெளியாகவிருந்தது. அமைதியாக பாசத்தோடு இருந்த நட்பு இந்தகாலத்தில் தான் பிரச்சனையை சந்திக்க காரணமாக இருந்தது.
அதாவது புதுபுது அர்த்தங்கள் படத்தின் பின்னணி இசையை அமைக்க இசைஞானியிடன் கே பாலச்சந்திர் கேட்டுள்ளார். ஆனால் எனக்கு நான்கு படங்கள் இருக்கிறது. அதனால் என்னால் பண்ண முடியாது என்றூ மறுத்துள்ளார் இசைஞானி.
இதனால் கடுப்பாகிய பாலச்சந்தர் குறித்த நேரத்தில் அந்த படம் வெளியக வேறொரு இசையமைப்பாளரை சந்தித்து முடித்திருக்கிறார். இதன்பின் பாலச்சந்தர் இளையராஜாவிடம் ஒட்டாமல் அடுத்தடுத்த படங்களில் ஒதுக்கி வந்துள்ளார். இசைஞானியை முதலில் எதிர்த்தவர் கே பால்ச்சந்தர் தானாம்.