நடிகையால் சினிமாவை விட்டு போன நடிகர் சிவக்குமார்.. உண்மையை உடைத்த பிரபலம்
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சினிமா பிரபலங்கள் பற்றி பல விஷயங்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர், நடிகர் சிவகுமார் சினிமாவில் எதற்காக விலகினார் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ஒரு நாள் சிவகுமார் சீரியல் ஒன்றில் நடித்து வந்த போது ஷாட்டில் உணர்ச்சிவசமாக ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே சீரியலில் நடித்த ஒரு துணை நடிகை சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தார்.
இது சிவகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் அவர், என்னம்மா நான் இங்க டயலாக் பேசிகிட்டு இருக்கேன். நீ இப்படி சத்தமா போன்ல பேசிட்டிருக்க என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த துணை நடிகை, என்ன சார் இப்படி பண்றீங்க. இத்தன வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க. எப்படியும் டப்பிங் பேச போறீங்க. டப்பிங்ல பாத்துக்கோங்க என்று பதில் சொல்லி மீண்டும் சத்தமாக போனில் பேசியுள்ளார்.
அன்றைய கால சினிமா எப்படி இருந்தது, இன்றைய சினிமா எப்படி இருக்கிறது என்று யோசித்த சிவகுமார் இனி சினிமா சீரியலில் நடிக்க கூடாது என்று முடிவ செய்தார் என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.