3 பேருடன் தகாத உறவில் இருந்தேன்!! அதிர்ச்சி கொடுத்த பில் கேட்ஸ்..
பில் கேட்ஸ்
உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் தான் மைக்ரோசாப்ஃட் உரிமையாளர் பில் கேட்ஸ். சமீபகாலமாக அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு வந்தது. சிறுமிகள், இளம் பெண்களை கடத்தி பணம் படைத்த பெரும் புள்ளிகளுக்கு அனுப்பி, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் பில் கேட்ஸ் என்று கூறப்பட்டது.

எப்ஸ்டீனுடனும் பல பெண்களுடனும் பில் கேட்ஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியாகி அதிர்ச்சியளித்தது. இதன்காரணமக 2021ல் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற்று பல மில்லியன் டாலர் ஜீவனாம்சமாக பெற்றார்.
விசாரணை
இந்நிலையில், தனக்கு இருந்த உறவுகளை வைத்து எப்ஸ்டீன் தன்னை மறைமுகமாக மிரட்டி வந்ததாக பில் கேட்ஸ் கூறியிருந்தார்.
தற்போது எப்ஸ்டீன் ஆவணங்களின்படி ஜூன் 10 அன்று அமெரிக்க பிரதிநிதிகள் சலையின் மேற்பார்வைக் குழு நடத்திய விசாரணையில், 3 பெண்களுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷிய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா, அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா உறவுகளில் இருந்ததையும், தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட்டுடன் 3வது உறவில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த உறவுகளுக்கோ அல்லது எப்ஸ்டீனுடனான சந்திப்புகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை. எப்ஸ்டீனின் குற்றங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

என்னுடைய துரோகம் குறித்த, பல பொய்களை இணைத்து கூறி, அவருடன் மீண்டும் இணையுமாறு எப்ஸ்டீன் என்னை வற்புறுத்தினார்.
எப்ஸ்டீன் என்னை நேரடியாக பிளாக்மெயில்
செய்து மிரட்டவில்லை, ஆனால் அவரின் செயல்கள்
அதை கருத்தில் கொண்டே அமைந்ததாக தான்
நம்புவதாகவும் பில் கேட்ஸ் கூறியிருக்கிறார்.