அட்வைஸ் செய்த தனுஷ்.. 13 வருடங்களாக பகையை மறக்காத வைகைப்புயல் வடிவேலு.. என்ன காரணம்!!
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் என்று கூறும் அளவிற்கு தன்னுடைய முக பாவனையால் தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த வடிவேலு சில நடிகர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.
அப்படி படிக்காதவன் படத்தில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு முன் வடிவேலு தான் கமிட்டாகி நடித்திருந்தார். பின் சில காரணங்களால் வடிவேலு மனஸ்தாபம் ஏற்பட்டு விலகிவிட்டாராம். இதற்கு என்ன காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் ஏகப்பட்ட டேக்குகளை வடிவேலு வாங்கி இருக்கிறார்.
இதனால் கடுப்பாகிய இயக்குனர் கேமராமேனிடம் சீக்கிரம் இந்த காட்சியை எடுங்கள் அவர் சம்பளம் நிமிஷத்திற்கு உயர்ந்து கொண்டே போகிறது என்று கூறியுள்ளார். ஏனென்றால் வடிவேலு நாள் சம்பளமாக அப்போதில் இருந்தே பெருபவர். அப்படி ஒரு நாள் சம்பளம் வாங்குவதை இயக்குனர் கூறியதும் வடிவேலு கோபத்தில் கடுப்பாகி இருக்கிறார்.
அதேசமயம் கதாநாயகனாக நடிக்கும் தனுஷ் வைகைப்புயலிடம் வந்து இயக்குனர் சொல்றத கேட்டு நடங்க என்று அட்வைசாக கூறியுள்ளார். இந்த விசயமும் வடிவேலுவை வெறுப்பேற்ற வடிவேலு கோபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி இருக்கிறாராம்.
வடிவேலுக்கு பெரிய நடிகர்களே அட்வைஸ் செய்யாத போது தனுஷ் இப்படி கூறியது ஈகோவை அதிகரித்திருக்கிறது.
இதன்பின் தனுஷிடம் வடிவேலு விவாவதம் செய்ய, உன் மாமாவுக்கே நான் தான் நடிப்பு சொல்லி கொடுத்தேன் என்று கண்டபடி கேட்டு படிக்காதவன் படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார் வடிவேலு. இப்படி பல படங்களில் சின்ன ஹீரோக்கள் மீது கோபப்பட்டு விலகி இருக்கிறார் வைகைப்புயல்.