கர்ப்பமானதால் வாங்கிய காசை திருப்பிக்கொடுத்தேன்!! சினிமாவில் இருந்து நடிகை மாளவிகா விலகிய காரணம்..
சித்திரம் பேசுதடி படத்தில் வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் பிரபலமான மாலவிகா எனும் ஸ்வேதா மேனன், முன்னணி நடிகர்களுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து மும்பையில் செட்டிலாகி சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் தான் சினிமாவில் இருந்து விலக என்ன காரணம் என்ற உண்மையை நடிகை மாளவிகா பகிர்ந்துள்ளார்.
சினிமா மீது காதல் ஏற்பட்டு மாடலிங்கில் விளம்பர படத்தில் நடித்து சினிமா வாய்ப்பு பெற்றேன். சினிமாவில் இருந்து நான் விலகுவேன் என்று நினைக்கவில்லை. திருமணத்திற்கு பின்பும் படங்களில் கமிட்டாகி இருந்தேன்.
அப்போது கர்ப்பமாக இருந்ததால் கமிட்டாகிய படங்களில் நடிக்க முடியாது என்று உறுதி செய்து வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.