சாகும் முன் இப்படியொரு விஷயத்தை செய்த நடிகர் ஜே கே ரித்தீஷ்!! ரகசியத்தை கூறிய ஆர்ஜே பாலாஜி..
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வந்தவர் ஜே கே ரித்தீஷ். ஒருசில படங்களில் நடித்துள்ள ஜே கே. நித்தீஷ், ஆர்ஜே. பாலாஜியின் எல் கேஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி அரசியலதை தாண்டி தன்னை அடையாளப்படுத்தி கொள்ள பல விதமான விளம்பரங்களை செய்து கொண்டாலும் கணக்குப்பார்க்காமல் அள்ளிக் கொடுப்பவர் என்ற பெயரை பெற்றார் ஜே கே ரித்தீஷ்.
கடந்த 2019ல் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக கூறிய நிலையில், இதயதுடிப்பு இருக்கிறது என்று வேறொரு மருத்துவமனைக்கு கூட்டிச்சென்ற போது அவர் இறந்துவிட்டதாக அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் மரணமடைந்த ஜே கே நித்திஷ் குறித்து ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு நாளைக்கு எனக்கு பலமுறை கால் செய்வார். எல்லா விஷயத்தை கூறி பாராட்டுவார். ஷூட்டிங்கில் அவருக்கு வணக்கம் வைத்தால் காசுக்கொடுப்பார் என்று சொல்லுவார்கள். அது கிடையாது, அவர் கண் முன்னாடி கஷ்டப்படுகிறாரா, யாராவது ஒருவர் சாப்பிடாமல் இருந்தால், 500 ரூபாய் கட்டை எடுத்து கொடுத்துட்டு போய்விடுவார். யார் காசு கொடுக்கிறார்களோ, கொடுக்கிறதுக்கு ஒரு மனசு வேண்டும். நானும் அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.
அப்போது, மேடையில் இரு குழந்தைக்கு ஆப்ரேஷன் பண்ணனும். நான் உதவுவதற்காக எழும் சமயத்தில், நான் இவருக்கு எல்லாமே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார். அதன்பின் ஒரு வீடியோவில், அந்த பையனுக்கு ஆப்ரேஷன் எல்லாம் முடிஞ்சி அனுப்பி வைத்திருக்கிறார். இதையெல்லாம் பேசினால் தான் ஜே கே ரித்திஷ் யாரென்று தெரியும் என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.