ஓசில வித்த காசுல.. மகள் கல்யாணம் பண்ணி வெச்சி வட்டி கட்டிட்டு இருக்கேன்!! ரோபோ சங்கர்..
காமெடி நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய மகள் இந்திரஜாவை அவரது மனைவியின் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு பிர்மமாண்ட முறையில் திருமணம் செய்து வைத்தார். பல பிரபலங்கள் கலந்து கொண்ட ரோபோ சங்கர் மகளின் திருமணம் பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை வைத்து பேசினார்கள். தமிழ் நாட்டில் ஒரு அம்பானி திருமணம் என்றும் ரோபோ சங்கர் பணத்தை மாறி இறைக்கிறார் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தில் 5000 கோடி செலவில் நடத்தப்பட்டது குறித்த விவாதத்தில் ரோபோ சங்கர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். பசிக்குது என்பதற்காக பணத்தை திண்க முடியுமா?. அங்கே காசை தூக்கி எறியும் போதெல்லாம் காந்தி தாத்தா அழுறாரு. என்னதான் பணம் இருக்கட்டும், அதுக்கென்று ஒரு அளவு இருக்கிறது.
நான் கூட என் மகள் திருமணம் முடித்தேன். அதையும் தமிழ் நாட்டில் ஒரு அம்பானி கல்யாணம் என்று கூறிவிட்டார்கள். கேட்க நல்லாதான் இருந்தது. என் கல்யாணம் பத்துக்கு பத்து ரூமில் ஒரு அனாதையாக நடந்தது. இன்றைக்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதில் என் ஒரு மகள் கல்யாணம் நன்றாக நடக்க வேண்டும் என்று பண்ணினேன். ஆனால், கல்யாண செலவு எல்லாம் என்னுடையது கிடையாது.
Colapration-னு சொல்றாங்களே, ஒரு கடையில், இது நல்லா இருக்குன்னு சொல்லி வித்தால் அதை ஓசியில் கொடுப்பான். இந்தமாதிரி நாங்கள் எல்லாத்தையும் விற்றோம் எல்லோரும். அதையே அம்பானி வீட்டு கல்யாணம் என்று சொல்லிட்டாங்க. கல்யாணத்தை நடத்திட்டு நான் அம்போன்னு நிக்கிறேன். அதுக்கு வட்டி கட்டிட்டு என்று ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video