ஒருவழியாக 4 ஆண்டுகளுக்கு பின் இழுத்து மூடப்பட்ட ரோஜா!! உருக்கத்தில் நடிகர் நடிகை போட்ட பதிவு..
சன் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக 1300 எபிசோட்டிற்கும் மேல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சிரீயல் ரோஜா.
நடிகர் சிபு, நடிகை பிரியங்கா நல்காரி முக்கிய ரோலில் நடித்து வந்த இந்த சீரியல் டிஆர்பியில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வந்தது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நல்ல வரவேற்பு பெற்றாலும் லாஜிக் மீரல்களால் அதிக ட்ரோல் மீம்ஸ்களுக்கும் ஆளாகியது ரோஜா சீரியல்.
அர்ஜுனாக எனக்கு எக்கச்சக்க அன்பை கொடுத்த மக்களுக்கும் சன் தொலைக்காட்சிக்கும் நன்றி என்று சிபு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
பின் ரோஜாவாக நடித்த பிரியங்கா, உங்கள் வீட்டுப்பெண்ணாக 4 ஆண்டுகளுக்கு மேலாக கொடுத்த அன்பிற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.
உங்கள் அன்பால் கிடைச்சது ரொம்ப ஆசிர்வதிகப்பட்டவள். அனைவருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.