அதை பண்றதே விஜய் மனைவி சங்கீதா தான்!! வெளிப்படையாக பேசிய எஸ் ஏ சந்திரசேகர்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இந்த இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். சமீபகாலமாக இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது, பெற்றோர்களை ஒதுக்கிவிட்டார் என்றும் மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய்யை நான் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை.
விஜய்க்கு என்னை தான் பிடிக்கும், ஆனால் இருவரும் பேசியது கிடையாது. ஸ்கேல் வைத்து அடித்தேன். குழந்தையாகவே இப்பவும் நினைத்திருப்பது உங்களுக்கு தவறாக இருக்கலாம், ஆனால் என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறாக இருக்கலாம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். மேலும், மருமகள் சங்கீதா மற்றும் பேரப்பிள்ளைகளை பற்றி பகிர்ந்துள்ளார். பேரன் சஞ்சய் இயக்குனராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12 ஆம் வகுப்பு படிக்கிறாள்.
மேலும் மகள் திவ்யா சினிமாவிற்கு வருவாரா என்று வனிதா கேட்க, அந்த விசயத்தில் அது என்னுடைய மருமகள் சங்கீதா கைக்குள் தான். அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார். ஹோம் ஒர்க் செய்வது முதல் பள்ளிக்கு அழைத்து செல்வது வரை அவர் தான் எல்லாமாக இருந்து பார்த்து வருகிறார்.
எங்கள் வீட்டுக்கு வரும் போது, நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பாங்க, அந்த அளவிற்கு ஒழுக்கமாக வளர்த்து வருகிறார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ் ஏ சி.
பேத்தி சினிமாவில் வருவது சங்கீதா கையில் தான் இருக்கிறது. பேரன், நடிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு இயக்குவது தான் பிடித்திருக்கிறது என்று வந்துவிட்டானே, என்னை போல். ஏற்கனவே இயக்குனராகிவிட்டான் என்று கூறியுள்ளார்.
You May Like This Video