ஷாலினி அதைமட்டும் பண்ணவே கூடாது!! அறுவை சிகிச்சை பற்றி பேசிய பிரபலம்..
அஜித் மனைவி நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சென்னைக்கு திரும்பிய அஜித், மருத்துவமனையில் மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியொன்றில், ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இருந்தார். அஜர்பைஜானில் சில தினங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு சென்னை வந்த அஜித் ஷாலினியை பார்த்தார். இப்படிப்பட்ட கணவர் கிடைக்க ஷாலினி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஷாலினி போன்ற பெண் மனைவியாக கிடைக்க அஜித்தும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஷாலினியின் கர்ப்பையில் பிரச்சனை இருந்ததாக மருத்துவர்கள் இந்த சிகிச்சையை பரிந்துரைத்துள்ளதாகவும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு ஷாலினி திரும்பியுள்ளதாகவும் அதிகமாக வெயிட் தூக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையில் இருந்து அவர் விரைவில் மீள்வதற்கு முக்கியமான பரிந்துரையாக இருக்கும் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். ஷாலினி வெயிட் தூக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் கூறியிருக்கிறார்.