ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவுக்கு இந்த நடிகை தான் காரணம்!! புது குண்டைப்போட்ட பிரபலம்..
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன். இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.. கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா அபிஷேக் ஜோடி விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை. மேலும் அம்பானி வீட்டு திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது பெற்றோருடன் திருமணத்தில் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் குடும்பத்துடன் ஒதுங்கியிருந்த வீடியோக்கள் வைரலானது. ஆனால் சமீபத்தில் அபிஷேக் பச்சன் வாங்கிய காரில் ஐஸ்வர்யா ராய்-க்கு பிடித்த நம்பர் பிளேட்டை வாங்கி போட்டிருக்கிறார் என்று யோகன் ஷா என்ற பிரபலம் தெரிவித்திருந்தார்.
என்ன காரணம்
சமீபத்தில் பயில்வான், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்றும் மேலும் அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.
தற்போது சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவுக்கு என்ன காரணம் என்று பேசியிருக்கிறார். அதி, பாலிவுட் நடிகை ரேகாவிடம் ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்பும் இவர்கள்து பிரச்சைக்கு காரணம்.
நடிகை ரேகா
ரேகா மற்றும் அமிதாப் பச்சன் காதல் விவகாரத்தால் ரேகா மற்றும் ஜெயா பச்சன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படியொரு நிலையில் ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நட்பு கொண்டிருப்பது குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தியதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐஸ்வர்யா ராய் இதை மறுத்ததுடன் தன் கோபத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரிவை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விரும்பமாட்டார்கள், இணைந்து வாழும் முடிவெடுப்பார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.