இப்படிப்பட்ட ஆள் என் மகனோட இருந்தா என்னவாகும்!! பயத்தில் புலம்பிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இந்த இடத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். சமீபகாலமாக இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது, பெற்றோர்களை ஒதுக்கிவிட்டார் என்றும் மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய்யை நான் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை.
விஜய்க்கு என்னைத்தான் பிடிக்கும், ஆனால் இருவரும் பேசியது கிடையாது. ஸ்கேல் வைத்து அடித்தேன். குழந்தையாகவே இப்பவும் நினைத்திருப்பது உங்களுக்கு தவறாக இருக்கலாம், ஆனால் என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறாக இருக்கலாம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். மேலும் அரசியலில் ஆரம்பிக்க விஜய்யை வற்புறுத்தியதும் சந்திரசேகர் தான் என்று செய்திகள் வெளியானது.
விஜய்யின் அரசியல் கட்சியை குறித்து எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், விஜய்யின் அரசியல் குறித்து தனக்கு பயமாக இருப்பதாகவும் புஸ்ஸி ஆனந்தையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் குரூப் வைத்துள்ளதில் விஜய்யும் இடம்பெற்றுள்ளார்.
மன்றத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் அருகில் இருக்கும் பெஞ்சில் படுத்துக்கொண்டு ஒருவரை வைத்து போட்டோ எடுக்கச்சொல்லி அதை ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார். இதை 50 பேர் ஷேர் செய்யவும் 100 பேர் லைக் செய்யவும் சொல்லுவார்.
விஜய்யும் அதை நம்பி, அண்ணன் நமக்காக உழைக்கிறார் என்று நாளையில் இருந்து என் அறையில் இருங்கள் என்று சொல்லிவிடுவார். இதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும் இப்படிப்பட்ட ஆள் கூட இருந்தா, என் மகனோட எதிர்காலம் என்னவாகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.