மேடையில் அசிங்கப்பட்ட ராஷ்மிகா: சாய் பல்லவிக்கு எப்படி இவ்ளோ ரசிகர்கள்
ப்ரேமம் படம் மூலமாக சினிமாவில் நுழைந்த சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சாய் பல்லவியின் நடிப்பு டோலிவுட்டில் அதிகம் ரசிக்கப்படுகிறது.
சமீபத்தில் சாய் பல்லவி Aadavallu Meeku Johaarlu என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்டார். அந்த படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேடையில் சாய் பல்லவி பேச தொடங்கியபோது ரசிகர்கள் அரங்கம் அதிரும் அளவுக்கு கத்தி ஆரவாரம் செய்தனர். அதிக நேரம் ரசிகர்கள் கத்தியது சாய் பல்லவிக்கு இருக்கும் மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை காட்டுகிறது, அதனால் அவர் லேடி பவர் ஸ்டார் என ஒருவர் பாராட்டினார்.
அதன் பின் ராஷ்மிகா பேச சென்றபோது அரங்கத்தில் ஆரவாரம் இல்லை, அதை எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் தான். ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. என ராஷ்மிகா வாயில் சொல்லாலது தான் பாக்கி. அதன் பின் அவர் தொடர்ந்து படம் பற்றி பேச தொடங்கிவிட்டார்.